நாளை சுர்ஜீத் இறுதிச் சடங்குகள்: சிபிம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்தின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சுர்ஜீத் நேற்று பிற்பகல் நோய்டா மெட்ரோ மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நாளை காலை 10 மணிக்கு சிபிஎம் தலைமை அலுவலகத்திற்கு உடல் கொண்டு வரப்படும். அங்கு பிற்பகல் 2.30 வரை இறுதி அஞ்சலி செலுத்தலாம். அதன் பின்னர் சுர்ஜீத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications