தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாலை விபத்தில் பலி

அவரது உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அகத்தியலிங்கத்தின் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரின் ஓட்டுனர், அகத்தியலிங்கத்தின் பேத்தி ஆகியோர் படுகாயத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முனைவர் ச.அகத்தியலிங்கம் அமெரிக்காவில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். திராவிட மொழிகள் பற்றிய அவர்தம் நூலும் சங்க இலக்கியம் பற்றிய அவர்களின் நூலும் குறிப்பிடத்தகுந்தன.
உலக அளவில் தமிழ் மொழியியலுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர். உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தமிழின் சிறப்பையும், மொழியிலின் மேன்மையையும் வெளிப்படுத்தியவர்.
அவரது உடலுக்கு புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு: http://muelangovan.blogspot.com/












Click it and Unblock the Notifications