செல்போனில் படம் பிடிப்பு-திருமலையில் பரபரப்பு
திருப்பதி: திருமலை திருப்பதியில் ஸ்வாமியை மர்ம நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை தேவஸ்தான அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலையில் கோயிலுக்குள் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றுள்ளார். ஸ்ரீவாரி உண்டியலுக்கு அருகில் உள்ள தங்கத்தாலான லஷ்மி சிலையை தனது செல்போனில் படம் பிடித்தார்.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பு அதிகாரிகள் 3 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் கோயிலுக்குள் மர்ம நபர் செல்போனில் படம் பிடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications