செக்ஸ் டார்ச்சர்- இன்ஸ்பெக்டர் மீது பெண் எஸ்ஐ புகார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக இன்ஸ்பெக்டர் மீது பெண் எஸ்ஐ போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன். இவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக, பெண் எஸ்ஐ ஷோபனா, எஸ்பியிடம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து ஷோபனா கூறியதாவது:

கடந்த ஜூலையில் சென்னிமலை காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியில் சேர்ந்தேன். நான் போலீஸ் துறையில் தேசிய அளவில் 4 தங்க பதக்கங்களை பெற்றுள்ளேன்.

எனது சொந்த ஊர் பொள்ளாச்சி. சமீபத்தில் தான் எனக்கு திருமணம் நடந்தது. நான் சென்னிமலையில் உள்ள போலீஸ் குடியிப்பில் எனது கணவருடன் குடியிருந்து வருகிறேன். எனது வீடு அருகியிலேயே இன்ஸ்பெக்டர் மனோகரன் வீடும் உள்ளது.

இதனால் என் வீட்டு அருகில் இன்ஸ்பெக்டர் ஜீப்பை நிறுத்தி விட்டு அதில் சத்தமாக டேப்பில் பாட்டு வைத்து விட்டு சென்றுவிடுவார்.

மேலும் அடிக்கடி என்னை இரவு ரோந்துக்கு அனுப்புகிறார். இதனால் நான் எனது சொந்த ஊருக்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்தேன். எனக்கு கோவை மாவட்டத்திற்கு பணி மாறுதல் வழங்கி அதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி அவினாஷ்குமார் வழங்கினார்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இன்ஸ்பெக்டர் மனோகரன் என்னை விடுவிடுக்க மறுக்கின்றார். வெளியில் சொல்ல முடியாத விஷயங்களை புகாரில் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+