முதல்வர்-கனிமொழி குறித்து அவதூறு: சிக்கலில் எஸ்.எஸ்.சந்திரன்
செங்கோட்டை: தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் கடந்த 6ம் தேதி அதிமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொது கூட்டம் நடைபெற்றது.
அதில் முன்னாள் எம்பியும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் கருணாநிதி கொடுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் எல்லாம் தினந்தோறும் குண்டுகளாக வெடிக்கின்றன என்றார்.
மேலும் திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூராக பேசினார்.
இதுகுறித்து மாநில திமுக பேச்சாளர் சாட்டையடி சக்திவேல் என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.சந்திரன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதமாகவும், மக்களிடம் தவறான கருத்தை பரப்புகின்ற அளவு அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் வேறு இரு திமுகவினர், கனிமொழி எம்பியை தகாத வார்த்தைகள் பேசியதாக எஸ்.எஸ்.சந்திரன் மீது இதே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications