கடல் எல்லை தாண்டினால்..டீசல் மானியம் ரத்து
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: இந்திய எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு டீசல் மான்யம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மீன்துறை உதவி இயக்குனர் ஜெம்புநாதன் கூறியுள்ளதாவது: இலங்கையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் கடலில் இந்திய எல்லையை தாண்டுவதோ, எல்லை அருகில் சென்று மின் பிடிக்கவோ கூடாது.
இந்த அறிவுரையை பின்பற்றாமல் செயல்படும் படகுகள் இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினரால் அடையாளம் காணப்பட்டால் அந்த படகுகளுக்கு உரிய தண்டத் தொகை வசூலிக்கப்படும். அத்துடன் அரசால் வழங்கப்படும் டீசல் மான்யம் நிறுத்தப்படும். மேலும் சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications