சிரஞ்சீவிக்கு அத்வானி வாழ்த்து!: கூட்டணி?
ஹைதராபாத்: புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு பாஜக தலைவர் அத்வானி வாழத்துத் தெரிவித்துள்ளார். அவருடன் கூட்டணிக்கும் பாஜக முயலும் எனத் தெரிகிறது.
ஆந்திர சினிமாவின் சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வரும் 26ம் தேதி அறிவிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானி, தொலைபேசி மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இருவரும் தொலை நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது கூட்டணி அமைப்பது குறித்தும் அத்வானி பேசியதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை மத்தியில் பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்தவர் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. அவருக்கு அத்வானியிடம் பெரும் செல்வாக்கு இருந்தது.
தான் துணை பிரதமராவது குறித்து பிற கட்சிகளுடன் விவாதிக்காத அத்வானி, நாயுடுவிடம் மட்டுமே அது குறித்துப் பேசினார்.
ஆனால், இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த பாஜகவும் நாயுடுவும் படு தோல்வி அடைந்தனர். மதவாத கட்சியுடன் கூட்டு சேர்ந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாகக் கூறி பாஜகவை விட்டு சந்திரபாபு நாயுடு விலகினார்.
இந் நிலையில் ஆந்திராவில் சிரஞ்சீவியுடன் கூட்டணிக்கு அஸ்திராவரம் போட ஆரம்பித்துள்ளார் அத்வானி.
ஆந்திராவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட காபு இனத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.