விசா விசாரணை: சென்னை வரும் எடியூரப்பா
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று சென்னை வருகிறார்.
அகில உலக கன்னட மாநாடு அமெரிக்காவில் சிகாகோ நகரில் இம் மாதம் 24ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இலக்கியவாதிகள், திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் பங்கேற்க விசா தொடர்பான விசாரணைக்காக எடியூரப்பா இன்று தனி விமானத்தில் சென்னை வருகிறார். அமெரிக்க தூதரகத்தில் நடக்கும் விசாரணையை முடித்துக் கொண்டு மீண்டும் அதே விமானத்தில் பெங்களூர் திரும்புகிறார்.
ஒகேனக்கல் பிரச்சனை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் எடியூரப்பாவின் சென்னை வரவுள்ளார்.












Click it and Unblock the Notifications