ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்குழு கூடியது
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் பொதுக்குழு கூட்டம் இன்று ஓசூரில் தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் ஓசூரில் இன்று காலை தொடங்கியது. தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மத்திய குழு உறுப்பினர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்றும், நாளையும், நிர்வாகக் குழுக் கூட்டமும், 24ம் தேதி பேரணியும், 25ம் தேதி பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
பொதுக்குழுவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு, திமுகவுடனான கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications