வாக்குறுதியைக் காப்பாற்றிய பல்கலைக்கழகம்
திருச்சி: உயர் நீதிமன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் பாதிக்கப்பட்ட 43 எம்சிஏ மாணவர்களுக்கு சேர்க்கை அளித்துள்ளது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்.
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மூலம் முறையாக இடம் கிடைத்தும், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்ட 63 மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கு வரும் கல்வியாண்டுகளில் சேர்க்கை அளிக்கப்படும் என்று பல்கலைக் கழகம் கோர்ட்டில் வாக்களித்திருந்தது. அதன்படி, பாதிக்கப்பட்ட 62 மாணவர்களில் 43 பேரை இக்கல்வியாண்டின் மூன்றாம் செமஸ்டரில் சேர்த்துக் கொண்டுள்ளது.
இதற்காகவே மூன்றாவது பிரிவினையும் பல்கலைக் கழகம் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவ மாணவிகளுக்கு விடுதி வசதிக்கும் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications