வங்கியில் ரூ.1.5 லட்சம் கையாடல்-ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் வங்கியில் கிளர்க் ஆக பணியாற்றி வந்த ஊழியர், ரூ. 1.5 லட்சம் வங்கிப் பணத்தை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த தனியார் வங்கி நிர்வாகம், அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தது. அதில் தங்களது வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஆறுமுகம், வங்கிப் பணத்திலிருந்து ரூ. 1.5லட்சத்தை கையாடல் செய்து விட்டார்.

கடந்த 19ம் தேதி புதுச்சேரியிலிருந்து, மதுராந்தகம் வழியாக ரூ. 1.14 கோடி வசூல் பணம் கொண்டு வரப்பட்டது.

இந்தப் பணத்தை ஷிப்ட் முறையில் வங்கி அதிகாரிகள் எண்ணினர். பின்னர் இப்பணத்தை ஆகஸ்ட் 20ம் தேதி கணக்கிட்டபோது, ரூ. 1.5 லட்சம் குறைந்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஊழியர் ஆறுமுகம்தான் பணத்தைக் கையாடல் செய்தததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்து கையாடல் செய்த பணத்தையும் கைப்பற்றினர்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வங்கியில் பியூன் ஆகப் பணியாற்றினார் ஆறுமுகம். பின்னர் கிளர்க் ஆக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+