வங்கியில் ரூ.1.5 லட்சம் கையாடல்-ஊழியர் கைது
சென்னை: தனியார் வங்கியில் கிளர்க் ஆக பணியாற்றி வந்த ஊழியர், ரூ. 1.5 லட்சம் வங்கிப் பணத்தை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த தனியார் வங்கி நிர்வாகம், அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தது. அதில் தங்களது வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஆறுமுகம், வங்கிப் பணத்திலிருந்து ரூ. 1.5லட்சத்தை கையாடல் செய்து விட்டார்.
கடந்த 19ம் தேதி புதுச்சேரியிலிருந்து, மதுராந்தகம் வழியாக ரூ. 1.14 கோடி வசூல் பணம் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பணத்தை ஷிப்ட் முறையில் வங்கி அதிகாரிகள் எண்ணினர். பின்னர் இப்பணத்தை ஆகஸ்ட் 20ம் தேதி கணக்கிட்டபோது, ரூ. 1.5 லட்சம் குறைந்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஊழியர் ஆறுமுகம்தான் பணத்தைக் கையாடல் செய்தததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்து கையாடல் செய்த பணத்தையும் கைப்பற்றினர்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வங்கியில் பியூன் ஆகப் பணியாற்றினார் ஆறுமுகம். பின்னர் கிளர்க் ஆக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications