காட்ராக்ட் விபரீதம்: அமைச்சர் வேங்கடபதி உறுதி
திருச்சி: தனியார் கண் மருத்துவமனையில் காட்ராக்ட் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் பார்வை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய நிவாரணமும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வெங்கடபதி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை அமைச்சர் வெங்கடபதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும். அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்ைக எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதி தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்து நேரில் விளக்கமளிக்கப்படும் என்றார் வெங்கடபதி.












Click it and Unblock the Notifications