கியூபாவை புரட்டிப் போட்ட புயல் - 77 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹவானா: கியூபாவில் நேற்று வீசிய பயங்கர புயலில் சிக்கி 77 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கியூபா நாட்டில் 240 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று பயங்கர புயல் காற்று வீசியது. இதில் வீடுகளின் கூரைகள், மரங்கள் பிடுங்கி எறியப்பட்டன. இந்த புயலில் சிக்கி இதுவரை 77 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேமடைந்துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மின் இணைப்பு உள்பட தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சேத விவரம் முழுமையாக தெரியவில்லை. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் முழு அளவில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications