தலித்கள் கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு-உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிதிராவிட மக்கள கோவிலுக்குள் சென்று வழிபடவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபட ஆதி திராவிடர் மக்களுக்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இங்கு மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அமைதிக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பலமுறை பேச்சுவார்த்தையும் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படவில்லை.

இதனையடுத்து கோவிலுக்குள் ஆதி திராவிடர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாததை கண்டித்து ஊர்வலம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எச்சரித்தார். இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோவிலை 4 வாரத்திற்குள் திறப்பதற்கு சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிடர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய அவர்களுக்கு தேவையான முழு பாதுகாப்பு அளிக்க உள்துறை செயலாளர், கோட்டாட்சியர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், இந்து சமய ஆணையர், இணை இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+