வைகையில் உயரும் நீர் மட்டம்-2வது அபாய எச்சரிக்கை
ஆண்டிபட்டி: தேனி, பெரியகுளம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாகவும், கேரளாவில் பெய்து வரும் மழையால் குமுளி பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டி வருகிறது.
இதையடுத்து இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனத் தெரிகிறது.
வைகை அணையின் மொத்த நீர் மட்ட அளவு 71 அடியாகும். இந் நிலையில் அணையின் நீர் மட்டம் கடந்த 28ம் தேதி 66 அடியை எட்டியதால் அன்று இரவே முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் அணையின் நீர் மட்டம் நேற்று 67.75 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை தொட்டுவிட்டால் 3வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உடனடியாக அணை திறக்கப்படும்.











Click it and Unblock the Notifications