டாடா நானோ ஆலை நீடிக்க மே. வங்க மக்கள் விருப்பம்: சர்வே
மும்பை: மேற்கு வங்கத்தில் டாடாவின் நானோ தொழிற்சாலை திட்டம் நீடிக்க வேண்டும் என அம்மாநில மக்கள் கருதுவதாக என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்டிடிவி தொலைக்காட்சிக்காக ஜிஎப்கே-மோட் நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1525 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது நடத்தப்பட்டது.
இவர்ளில் 75 சதவீதம் பேர் டாடாவின் நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திற்கு வந்திருப்பது மாநிலத்திற்கு நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடந்து, நானோ ஆலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்காக 1000 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் 400 ஏக்கர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் 63 சதவீதம் பேர், மம்தா பானர்ஜி சமரசத்திற்கு உடன்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 3ல் 2 பங்கு பேர் டாடா நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
நானோ ஆலைக்கு சிங்கூர்தான் பொருத்தமானது என்று 68 சதவீதம் பேரும், இல்லை என்று 59 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications