ஜாதி வெறி: தாழ்த்தப்பட்ட சிறுமியை மலம் அள்ள வைத்து சித்திரவதை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் ேசர்ந்த சிறுமியை மலம் அள்ள வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துறையில் ஈடுபட்டு வரும் இவர்களது நிலங்களை அதே கிராமத்தில் வசிக்கும் இன்னொரு சாதியினர் மிரட்டி அபகரித்து வருவதாக இம்மக்கள் புகார் கூறியுள்ளனர்.
திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர், தங்களது நிலம் மற்றும் போக்குவரத்து சாலைப் பகுதியை முள் வேலி போட்டு அந்த சாதியினர் தடுப்பதாக புகார் கூறினர்.
மேலும், பல்லாண்டு காலமாக தாங்கள் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்த அவர்கள், தேநீர் கடைகளில் சமமாக தேநீர் தர மறுப்பது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, ஊர்ப் பஞ்சாயத்து என்று கூறி சரமாரியாக தாக்குதல் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் தாங்கள் தினந்தோறும் வேதனை அனுபவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
இக்கொடுமைகளின் உச்சமாக, சமீபத்தில் அருந்ததியர் காலனிக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் மலம் கழிக்கச் சென்ற 7 வயது சிறுமியை மிரட்டி, அவளது கையாலேயே மலத்தை அள்ள வைத்த கொடுமையையும் சாதி வெறியர்கள் அரங்கேற்றியதாக அம்மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பல புகார்களை காவல் நிலையத்தில் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications