கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்!
கரூர்: கரூர் அருகே ஒரு பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.
கரூர் மாவட்டம், சின்னத்தராபுரம் அருகே உள்ளது அரங்கம்பாளையத்தை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகள் ரேகா (32) (இரு பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
இவர் வெள்ளகோவில் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வழக்கம் போல் இவர் பஸ் மூலம் இரவில் வீடு திரும்பினார்.
பஸ் ஸ்டாப்பில் இருந்து தனது வீட்டற்கு சென்று கொண்டிருந்த இவரை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ், பூபதி, பன்னீர்செல்வம், அறிவழகன், மகேஷ்குமார், வினோத் ஆகியோர் வழிமறித்துள்ளனர்.
இதையடுத்து தப்பியோடிய ரேகாவை இந்தக் கும்பல் பலவந்தமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தது.
அலங்கோலமான நிலையில் வீடு வந்த ரேகாவை அவரது பெற்றோர் உடனடியாக சின்ன தாரபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தக் குடும்பம் கண்ணீருடன் புகார் தந்தது.
இதையடுத்து விரைந்த போலீசார் 6 பேரையும் கைது செய்து கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications