2 தலை, 4 கை, 4 கால்களுடன் பெண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்களுடன் பெண் குழந்தை இறந்தே பிறந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த செல்விக்கு (28) தலைமை அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிரசவிக்கப்பட்டது.
அந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்கள் இருந்தன. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது.
கர்ப்பிணியான பின் அந்தப் பெண் ஸ்கேன் உள்ளிட்ட பல மருத்துவ சோதனைகளுக்கு உட்பட்டுள்ளார். அப்போதே குழந்தை இவ்வாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து பிறப்பை தடுத்திருக்கலாம் என பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications