என்.பி.டியில் இந்தியா கையெழுத்திடும் வரை யுரேனியம் தர மாட்டோம்: ஆஸி.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் சைமோன் கிரியான் அளித்துள்ள பேட்டியில், என்.எஸ்.ஜி. இந்தியாவுக்கு அணு வர்த்தக அனுமதியை அளித்துள்ளதை ஆஸ்திரேலியா வரவேற்கிறது.
இருப்பினும், என்.பி.டி.யில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே யுரேனியம் எரிபொருளை சப்ளை செய்வது என ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அது இந்தியாவுக்கும் பொருந்தும்.
என்.பி.டியில் உறுப்பினராக இந்தியா மாறாத வரை அதற்கு யுரேனியம் விற்பனை செய்ய முடியாது.
என்.எஸ்.ஜியின் முடிவு உலகளாவிய அணு கட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரூ ராப் கூறுகையில், இது ஒருதலைப்பட்சமான முடிவு. இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் பயணம் செய்யும்போது, புதிய யுரேனியம் கொள்கையை அறிவிக்க அந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications