ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்-கலெக்டர் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் தொடந்தது. இதனால் கோபமடைந்த கலெக்டர் வெளிநடப்பு செய்தார்.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் 11ம் தேதி பரமகுடியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமார் மற்றும் அதிகாரிகள், பாமக, புதிய தமிழகம், ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானமாக பேசும்படி கலெக்டர் பலமுறை கூறியும் அங்கு கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.

இதனால் கோபம் அடைந்த கலெக்டர் கிர்லோஷ்குமார் கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், கலெக்டரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+