அணு ஒப்பந்தம்: யுஎஸ் காங்கிரஸ் ஒப்புதல் தரும்: புஷ் நம்பிக்கை
வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) ஒப்புதல் கிடைக்கும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில்செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜோன்ட்ரோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனது பதவிக்காலம் முடிவதற்குள் இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அனுமதி கிடைக்கும் என்று அதிபர் புஷ் நம்பிக்கையுடன் உள்ளார்.
ஒப்பந்தம் நிறைவேறும் பொருட்டு காங்கிரஸுடன் அரசு இணைந்து செயல்படுகிறது. நிச்சயம் ஒப்பந்தம் அனுமதி பெறும்.
அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் அணு ஆயுத சோதனை நடத்தினால் சர்வதேச சமுதாயம் என்ன செய்யும் என்பதை இந்தியா நன்கு அறியும் என்றார்.
இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நாடாளுமன்றத்தி்ல் தாக்கல் செய்யவும், வேகமாக ஒப்புதல் பெறவும் நடவடிக்கைகளை புஷ் ஆரம்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications