ஆந்திரா-ஒரிஸ்ஸாவை நெருங்கும் புதிய புயல் சின்னம்
டெல்லி: வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயல் ஆந்திரா, ஒரிஸ்ஸாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்க கடலில் 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் வடக்கு ஆந்திராவிலும் ஒரிஸ்ஸாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த மூன்று நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இதற்கிடையே புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா கடற்கரையை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், ஒரிஸ்ஸா, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் மேலும் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications