மருத்துவமனையில் குழந்தை மாயம்-பெண்ணுக்கு வலை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவை மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை காணாமல் போனது.

புதுச்சேரி தவளைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி-அம்சா தம்பதிக்கு புதுவை மகப்போறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

அம்சா குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அம்சாவிடம் பேசிக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் மருத்துவமனையிலே தங்கி அம்சாவை கவனித்துக் கொண்டார். இதனால் அவரை நம்பிய அம்சா, தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

பரிசோதனை முடிந்து வந்து பார்த்தபோது அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் எங்குமே அவர்களை காணவில்லை.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடமும், போலீஸிலும் புகார் செய்தார். குழந்தையையும், அந்த பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+