19ல் கூடுகிறது அதிமுக செயற்குழு-பொதுக்குழு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா 6-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அக் கட்சியின் செயற் குழு, பொதுக் குழு கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார்.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களில், ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது, கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
இந்த முறை எஸ்.வி. சேகருக்கு அழைப்புண்டா??!!












Click it and Unblock the Notifications