தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டுக்கு 'வெட்டு'!
சென்னை: தமிழகத்தின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின் வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு காரணமாக ஷிப்ட் முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் தொழிற்சாலைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால், மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரியத் தலைவர் மச்சேந்திர நாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக காற்றாலை மின்சாரம் கூடுதலாக வருகிறது. நேற்று மட்டும் 1800 முதல் 1900 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைத்தது.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்லமழை பெய்து வருவதால், மின்சாரத் தேவை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நேற்று மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை.
கல்பாக்கத்திலிருந்தும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கிறது. அங்கு சில நாட்களுக்கு முன்பு 63 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. தற்போது அது 160 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நெய்வேலியிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே மழையும், காற்றும் தொடர்ந்தால், மின் தட்டுப்பாடு பூரணமாக நீங்கும். எனவே மின் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications