Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா நூற்றாண்டு: 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் நூற்றாண்டையொட்டி தமிழக சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில், 15.9.2008 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும், 60 வயதும் அதற்கும் மேலாகாவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி, விடுதலை அளிப்பதென கவர்னரின் ஒப்புதலைப் பெற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலிருந்தும் 22 பெண் கைதிகள் உள்பட 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் 15.9.2008 அன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

1405 கைதிகளும் எந்தெந்த சிறைகளிலிருந்து விடுதலையாகிறார்கள் என்ற விவரத்தை சிறைத்துறை டிஜிபி நடராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி ஆசியாவின் மிகப் பெரிய சிறையான புழல் சிறையிலிருந்து 111 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கோவை மத்திய சிறையிலிருந்து 296 பேரும், பாளை. மத்திய சிறையிலிருந்து 273 பேரும், மதுரையிலிருந்து 266 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.

திருச்சியிலிருந்து 174 கைதிகளும், கடலூரிலிருந்து 128 பேர், வேலூரிலிருந்து 122 பேரும் விடுதலை செயய்ப்படுகின்றனர்.

சேலம் சிறையிலிருந்து 10 கைதிகள், வேலூர் பெண்கள் சிறையிலிருந்து 9 பேர், திருச்சி பெண்கள் சிறையிலிருந்து 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.

இதுதவிர கேரள சிறையில் இருக்கும் 3 தமிழக கைதிகளும் விடுவிக்கப்படுவதாக நடராஜ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+