ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் இயற்ற வீர விளையாட்டு பேரவை கோரிக்கை
மதுரை: தமிழர்களின் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு தமிழக அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பேரவையின் மாநில செயற் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டு பழங்காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது.
தமிழக அரசின் முயற்சியால் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கி சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. இதற்கு காரணமான தமிழக முதல்வர் கதருணாநிதிக்கும், மாவட்ட ஆட்சியர் ஜவஹர், சட்டமன்ற உறுப்பினர் மூர்த்திக்கும் பேரவையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்து தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications