உள்நாட்டு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்-பிரதமர் திட்டம்?

உள்நாட்டு பாதுகாப்புப்பை கண்காணிக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் செயல்பாட்டின் மீது பிரதமர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு திருப்தி இல்லை. அவரை மாற்றுமாறு லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சி தலைவர்களும் மூத்த அமைச்சர்கள் சிலரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நெருக்கி வருகின்றனர்.
ஆனால், சோனியாவின் கருணைப் பார்வை உள்ளதால் சிவராஜ் பாட்டீல் தப்பி வருகிறார்.
இந் நிலையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை உருவாக்காலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி கூட்டியுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் இன்று உரையாற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி இணையமைச்சகத்தை உருவாக்கினார். சுபோத் காந்த் சகாய் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்தத் துறை கைவிடப்பட்டு, உள்துறையே உள்நாட்டு பாதுகாப்பையும் கவனித்து வந்தது.
சோனியா உத்தரவிட்டால் ராஜினாமா-சிவராஜ்:
இந் நிலையில் தனியார் டிவிக்கு பேட்டியளித்த சிவராஜ் பாட்டீல்,
கட்சி மேலிடத்தின் ஆசி இருப்பதால் தான் நான் பதவியில் நீடிக்கிறேன். கட்சி மேலிடம் விரும்பாவிட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்றார்.
டிரஸ்சில் கவனம்:
இதற்கிடையே டெல்லியில் குண்டுவெடிப்புகள் நடந்த தினத்தன்று அடுத்தடுத்து சில டிவிக்களுக்கு பேட்டிளித்தார் பாட்டீல். அப்போது ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு உடையில் இருந்தார்.
குண்டு வெடித்து பாதித்த நேரத்தில் கூட அவரது டிரஸ் மாற்றும் ஆர்வம் குறித்து எரிச்சலுடன் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து பாட்டீல் கூறுகையில், நான் எப்போதும் சுத்தமான ஆடையணிபவன். முடிந்தால் என் கொள்கையை எதிர்த்து விமர்சிக்கட்டும், மாறாக என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று கோபமாகக் கூறியுள்ளார்.
சிவராஜை மாற்ற பாஜக கோரிக்கை:
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப்ரூடி கூறுகையி்ல், சோனியாவுக்கு விசுவாசமாக இருப்பதால் சிவராஜ் பதவியில் நீடிக்கிறார். தேசிய பாதுகாப்பில் அவருக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை. பாதுகாப்பு குளறுபடிக்கு பிரதமரும், பாட்டீலும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க தவறிவிட்ட பின்னும், சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்பதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications