For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி இலவசமாக விநியோகித்த திமுக நகராட்சி தலைவர்

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தமிழக அரசு தொடங்கியுள்ள கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை மொத்தமாக வாங்கி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக விநியோகித்துள்ளார் திமுக நகராட்சித் தலைவர் ஒருவர்.

திண்டுக்கல் நகரில் நேற்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் நகராட்சித் தலைவர் நடராஜன், நகரில் உள்ள 6 ரேஷன் கடைகளிலும் மொத்த அரிசியையும் தனது பணத்தைக் கொடுத்து வாங்கினார்.

பின்னர் இந்தக் கடைகளில் உள்ள 4,130 ரேஷன் கார்டு தாரர்களுக்கும் கார்டுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி அசத்தினார்.

இதற்கான தொகை ரூ.82,600ஐ நகராட்சி தலைவர் நடராஜன் கூட்டுறவு இணைப்பதிவாளர் கார்த்திகேயனிடம் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X