உள்ளாட்சி இடைத்தேர்தல் டவுன் பஞ்சாயத்துக்களில் 77% வாக்குகள் பதிவு
{image-ballot box250_19092008.jpg tamil.oneindia.com}சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் டவுன் பஞ்சாயத்துக்களில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரையில், 73 சதவீதமும், சென்னையில் 56 சதவீத அளவுக்கும் வாக்குப் பதிவு இருந்தது.
ஊரக உள்ளாட்சி, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் , பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 679 இடங்களுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.
இதில், கிராமப் புறங்களில் 65.36 சதவீத வாக்குகளும், டவுன் பஞ்சாயத்துக்களில் 77.57 சதவீத வாக்குகளும், மூன்றாம் நிலை நகராட்சிகளில் 70.51 சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் 62.46 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மதுரையில் 73.83 சதவீதம்..
சென்னை மாநகராட்சியில் 56.18 சதவீதமும், மதுரையில், 73.83 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 65.36 சதவீதமும், நகரப் பகுதிகளில் 67.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications