சங்கரராமன் கொலை வழக்கு: அக். 24க்கு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட் அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு இன்று புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 14 பேர் வரவில்லை. இதுதொடர்பாக அவர்களது சார்பில் அவர்களது வக்கீல்கள் விளக்க மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அக்டோபர் 24ம் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் புதுச்சேரி மாநில அரசு சார்பில் அரசு வக்கீலை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், புதுச்சேரி அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வக்கீல் தேவதாஸ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications