அரசு மருத்துவமனைக்கு நிதி-அதிமுக ஆர்பாட்டம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்காததை கண்டித்தும், கூடுதல் மின் வெட்டை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மணப்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆணை என்ற ஒரே காரணத்திற்காக, மணப்பாறை அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு திமுக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
இது போன்ற அவசியமான சுகாதாரத் திட்டத்திற்காக அரசியல் சாயம் பூசும் அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு என ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் வணிகர்கள் புகார் கூறுகின்றனர். இதை கண்டித்து இன்று மணப்பாறை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மணப்பாறை அரசு பொது மருத்துவமனை முன்பு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications