For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷேவாக்குடன் மோதல் - முனாப் படேலுக்கு அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இராணி கோப்பை போட்டியின்போது ஷேவாக்கோடு மோதலில் ஈடுபட்ட முனாப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அவருக்கு வழங்கப்படும் தொகையில் 70 சதவீதத்தை அபராதமாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சிக் கோப்பை சாம்பியன் டெல்லி மோதிய இராணிக் கோப்பை போட்டி பரோடாவில் நடைபெற்றது. இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ரெஸ்ட் ஆப் இந்தியா பந்து வீச்சாளர் முனாப் படேல் மற்றும் டெல்லி ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது டெல்லி கேப்டன் ஷேவாக் குறுக்கிட்டு சமரசம் செய்ய முயன்றார். உடனே முனாப் படேல், ஷேவாக்கோடு வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக ஷேவாக், முனாப் படேல் மீது புகார் செய்தார். இருப்பினும் நடவடிக்ைக தாமதமானதால் கோபித்துக் கொண்டு பாதியிலேயே ஆட்டத்ைத விட்டு வெளியேறிய ஷேவாக் டெல்லி திரும்பி விட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், முனாப் படேலுக்கு அபராதம் விதித்துள்ளார். இந்த போட்டிக்கு அவருக்கு பெறும் சம்பளத்தில் இருந்து 70 சதவீதம் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X