இந்துக்களை காவு வாங்கும் அரசியல் தந்திரங்கள் தோற்கும்: ராம.கோபாலன்
சென்னை: கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என நானாவதி கமிஷன் தெளிவுபடுத்தி விட்டது. வரும் தேர்தலில் இந்துக்களை காவு வாங்கும் அரசியல் தந்திரங்கள் தோற்கும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக நீதிபதி நானாவதி கமிஷன் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
எவ்வளவு கொடூரமான முறையில் இந்த படுகொலை நடந்திருக்கிறது என்பதையும், இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பதையும் கமிஷனின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
கோத்ரா சம்பவம் குறித்து விசாரித்த பானர்ஜி கமிஷன் இது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியவுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தோற்கடிக்க சில கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலி மதச்சார்பின்மை கட்சிகளின் பொய்ப்பிரச்சாரத்தை குஜராத் மக்கள் ஏற்கவில்லை.
இந்த தீர்ப்பின் காரணமாக வரவிருக்கும் தேர்தல்களில் ஓட்டுக்காக இந்துக்களை காவு வாங்கும் மூல அரசியல், மலிவான தந்திரங்கள் தோற்கப் போவது உறுதி என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.












Click it and Unblock the Notifications