For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாடா வெளியேற்றம் தொழில்துறைக்கு துக்க தினம்: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற டாடா நிறுவனம் முடிவு செய்திருப்பது, இந்தியத் தொழில்துறைக்கு துக்க தினமாகும் என்று பாஜக கருத்து ெதரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாடா நிறுவனத்ைத தக்க வைத்துக் கொள்வதில் மேற்கு வங்க அரசு தவறி விட்டது. டாடா நிறுவனம் வெளியேறியதற்கு மேற்கு வங்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தப்பட்டது முதலே மேற்கு வங்க அரசு இந்த விஷயத்தில் தோல்வியை சந்தித்து வந்தது. நானோ திட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் விவசாயிகளின் நலனையும் காக்க மேற்கு வங்க அரசு தவறி விட்டது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய நிவாரணத் தொகையையும் வழங்க அரசு தவறி விட்டது. அதேபோல இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் மேற்கு வங்க அரசு தவறி விட்டது.

டாடா போன்ற புகழ் பெற்ற நிறுவனம் வெளியேறும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட மேற்கு வங்க அரசின் நிர்வாக திறமையின்மையே காரணமாக இருக்க முடியும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X