மகளை எழுத்தராக்க முயன்ற திமுக பஞ். தலைவரின் முயற்சி தோல்வி
சென்னை: சென்னை அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தனது மகளை ஊராட்சி அலுவலக எழுத்தராக நியமிக்க முயன்றார். ஆனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
சென்னை, மேடவாக்கம் அருகே உள்ளது ஒட்டியம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவராக இருப்பவர் சடையப்பன். இவர் திமுகவைச் சேர்ந்தவராவார். இவரது மகள் சுதா.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில், எழுத்தர் பணி காலியாக உள்ளது. இதில் சேர 4 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் பட்டதாரியான தனது மகள் சுதாவை அப்பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தார் சடையப்பன்.
இதையடுத்து நேற்று மன்றக் கூட்டத்தை அவர் கூட்டினார். அதில் சுதாவை எழுத்தராக நியமிக்க தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த ராஜாராமன் மற்றும் கவுன்சிலர்கள் ஏழுமலை, சுந்தரராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்னர்.
இது அரசு விதிமுறைகளை மீறும் செயல், ஏற்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனாலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தார் சடையப்பன். இதையடுத்து 3 பேரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சையை வளர்க்க விரும்பாமல் மகளை எழுத்தர் பதவியில் நியமிக்கும் தீர்மானத்தை கைவிட்டு விட்டு கிளம்பிச் சென்றார் சடையப்பன்.
-
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications