சூர்யா அறிமுகப்படுத்திய 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி'

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுவைச் சிகிச்சையில் மிகப் பெரிய புரட்சியைத் தோற்றுவித்தது காப்ஸ்யூல் எண்டோஸ்கோபியின் கண்டுபிடிப்பு.

நோய்க்கு சிகிச்சை தர முதலில் அந்த நோயைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

நமது உணவு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சரிசெய்ய முன்பெல்லாம் ஸ்டீல் குழாய் வழியாக உபகரணங்களை அனுப்பி சோதித்து பின் அறுவைச் சிகிச்சை செய்வார்கள்.

ஆனால் இப்போது மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஒரு சிறிய மாத்திரை வடிவில் கேமராவைப் பொருத்தி உணவு மண்டலத்துக்குள் அனுப்புகிறார்கள். எங்கு நோய் பாதிப்பு உள்ளது என்பதை இந்த கேமரா கண்டுபிடித்துவிடும். அடுத்த எட்டு மணி நேரத்தில் 50,000 படங்களை எடுத்துத் தள்ளும இந்தக் கேமராவின் மூலம் நோயைக் கண்டறிவது சுலபம். சிகிச்சையை வேகமாகத் தொடங்கவும் இது உதவும்.

2002ம் ஆண்டே இந்த வகை நோயறியும் கருவியை சென்னையின் பிரபல மருத்துவர் டாக்டர் மோகன் பிரசாத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.

இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் சமீபத்தில் இக்கருவியை முறைப்படி அறிமுகப்படுத்தினார் நடிகர் சூர்யா.

இந்தக் கருவி உண்மையிலேயே உலக மக்களை நோயிலிருந்து காக்கும் பெரிய விஷயம். இங்கே எத்தனையோ பேர் தங்களுக்கு வந்துள்ள நோய் என்ன என்று தெரியாமலேயே இறந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் இக்கருவி மிகவும் அவசியம் என்றார் சூர்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+