இந்திய முதலீடுகள்: திரும்ப வாங்கும் சர்வதேச நிதி அமைப்புகள்!

Subscribe to Oneindia Tamil

Bankrupt
சென்னை: பெரும் சரிவுக்குள்ளான சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளான லேஹ்மன் பிரதர்ஸ்,மெர்ரில் லின்ஜ், மார்கன் ஸ்டேன்லி, சிட்டி குரூப் மற்றும் கோல்ட்மேன் சாஷ் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் உள்ள தங்கள் பங்குகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.

குறிப்பாக உள்கட்டமைப்புத் துறை நிறுவனங்களில் உள்ள தங்களது பங்குகளை உடனடியாக விற்று வருகின்றன. இந்தியாவின் முதலீட்டுத் துறையில் இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தை வரலாறு காணாத சரிவைச் சந்திக்க ஆரம்பித்திருப்பதன் பின்னணி இதுதான்.

மேற்கண்ட ஐந்து வங்கிகளும் சர்வதேச அளவில் பல துறைகளில் முதலீடு செய்துள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பஙகுகளை வாங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலும் உள்கட்டமைப்புத் துறையில்தான் இந்த வங்கிகளின் பெரும் தொகையை பங்குகளாக முதலீடு செய்திருந்தன.

சமீபத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்து விட்ட லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம், ஐதராபாதைச் சேர்ந்த கே.எஸ்.கே எனர்ஜி., கே.பி.ஐ.டி கம்மின்ஸ், கிரேன்ஸ் சாப்ட்வேர் மற்றும் பெட்டர்ஸ் லாயிட் நிறுவனங்களில்தான் பெருமளவு முதலீடு செய்திருந்தது. அதே போல விப்ரோ போன்ற பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிலும் முதலீடு செய்திருந்தனர்.

இப்போது லேஹ்மன் பிரதர்ஸ் திவாலாகி விட்டதால், அனைத்து முதலீடுகளையும் திரும்பப் பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இந்தச் செய்தி வெளியில் பரவினால் பெரும் சரிவு தங்களுக்குத்தான் என்பதை உணர்ந்து பல நிறுவனங்கள் அதுகுறித்து வாய் திறக்காமல் உள்ளன. விப்ரோ, டிசிஎஸ் கூட, லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி தங்களைப் பாதிக்கவில்லை என அறிவித்திருந்தன.

அதேபோல எஸ் குமார்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான மார்கன் ஸ்டேன்லி, முதலீட்டு வங்கி என்ற நிலையிலிருந்து சாதாரண வங்கியாக மாற உள்ளது. எனவே தற்போது எஸ் குமார்ஸில் முதலீடு செய்துள்ள தொகையை முழுவதுமாகவே திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தில் தனக்குள்ள 1.31 கோடி பங்குளை ஏற்கெனவே விற்றுவிட்டது. இன்னும் பாக்கியுள்ள 80 லட்சம் பங்குகளையும் விற்கும் முயற்சியில் உள்ளது. லட்சமி எனர்ஜி மற்றும் புட்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது 2 சதவிகித பங்குகளையும் விற்கப் போகிறு இந்நிறுவனம்.

சிட்டி குரூப்பும் தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்று வருகிறது. ருச்சி சோயாவில் தான் முதலீடு செய்த 19 லட்சம் பங்குகளை சமீபத்தில் விற்றது இந்நிறுவனம்.

பினாக்கிள் பயோடெக்கிலிருந்த தனது பங்குகளில் 18 லட்சம் எண்ணிக்கையிலான பங்குகளை விற்றுள்ளது மெர்ரில் லின்ஜ். பிற நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளையும் விற்கப் போகிறது இந்த வங்கி.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அது இந்தியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என அஞ்சுகின்றனர் நிபுணர்கள்.

வரும் காலம் சோதனைக் காலம்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+