மகளுக்கு கொடுமை-மருமகனை கொன்ற மாமியார்
திருச்சி: மகளை கொடுமைப்படுத்திய மருமகனை கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டார்.
திருச்சியை அடுத்த பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (46). இவரது மகள் வசந்தா. இவருக்கும் அத்தை மகனான மணிகண்டனுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
மணிகண்டன் 3 ஆண்டுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். 3 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் தாயனூர் ரோட்டில் மணிகண்டன் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாமியார் முத்துலட்சுமி மற்றும் மகன் விஸ்வநாதனை (24) கைது செய்தனர்.
விசாரணையில் விஸ்வநாதன் அளித்த வாக்குமூலம்:
மாமா மணிகண்டன் என் அக்காள் வசந்தா மீது சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இது குறித்து மகளிர் போலீசில் என் அக்கா புகார் செய்தார். போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனால், மணிகண்டன் தொடர்ந்து தொல்லை தந்ததால் அக்கா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
தொடர்ந்து அக்காவை மாமா கொடுமைப்படுத்தி வந்ததால் அவரை கொலை செய்ய நானும், என் தாயாரும் முடிவு செய்தோம்.
அவரை சமாதானம் பேச வரும்படி தொலைபேசியில் அழைத்தேன். அவரும் பள்ளக்காடுக்கு இரவில் வந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டிருந்ததால் அதை சாதகமாக பயன்படுத்தி தயாராக வைத்திருந்த கத்தி, அரிவாளால் நானும், என்னுடைய தாயாரும் மாமாவை வெட்ட முயன்றோம். அவர் எங்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
இருவரும் அவரை துரத்தினோம். ஆத்திரத்தில் என் தாயார் மாமாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications