சென்னை-2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு

நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்தது.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் 49 பயணிகளுடன் டேக்-ஆப் செய்ய ரன்வேயில் ஓட ஆரம்பித்தது.
இந் நிலையில் அந்த ரன்-வேக்கு பக்கத்தில் இருந்த பிரிவில் இருந்து (bay) துபாய் செல்லும் எடிகாத் நிறுவனத்தி்ன் சரக்கு விமானம் திடீரென அந்த ரன் வேயில் நுழைய ஆரம்பித்தது.
இதைப் பார்த்த விமான நிலைய ஏப்ரான் பிரிவின் மேலாளர் யுகநாதன் அதிர்ந்துபோய் உடனே எடிகாத் விமான பைலட்டை தொடர்பு கொண்டு அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது. இந்த விமானத்தை உரிய நேரத்தில் நிறுத்தியிருக்காவிட்டால் ரன்வேயில் ஓட ஆரம்பித்த பாரமவுண்ட் விமானத்துடன் அது நிச்சயம் மோதியிருக்கும்.
இந்தச் சம்பவத்தையடுத்து எடிகாத் விமானம் துபாய் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதி பெறாமல் விமானத்தை ரன்வேக்குள் செலுத்திய அதன் விமானியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications