தீவிரவாதம் தான் பாக் எதிரி: இந்தியா அல்ல-ஓபாமா
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உண்மையான எதிரி தீவிரவாதிகளும், தீவிரவாதமும்தான், இந்தியா அல்ல என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பாரக் ஓபாமாக தெரிவித்துள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஓபாமா அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானின் உண்மையான, மிகப் பெரிய மிரட்டல், எதிரி தீவிரவாதிகள்தான். இந்தியா அல்ல. இதை பாகிஸ்தான் தலைவர்கள் உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும்.
பாகிஸதானில் தற்போது ஊசலாடும் ஜனநாயக அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு அனைவரும், அனைத்து வகையிலும் ஆதரவு தர வேண்டும். ராணுவ உதவி மட்டும்தான் உதவி என்றில்லை. மாறாக வறுமையைப் போக்கவும், கல்வி அறிவை அதிகரிக்கவும் உதவ வேண்டும்.
பாகிஸ்தானில் கல்வியறிவு மிகவும் மோசமாக உள்ளது. அதை பாகிஸ்தான் அரசு போக்க வேண்டும் எனவே நான் அதிபராக வந்தால் ராணுவ உதவி தவிர்த்த பிற உதவிகளை அதிக அளவில் பாகிஸ்தானுக்கு செய்வேன்.
தற்போது பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிராக தீவிரவாதம் உள்ளது. இந்தியாவை விட இதுதான் பெரிய மிரட்டல். இது அவர்களது வரலாற்று எதிரி. அவர்களுடனேயே இந்த தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் இன்னும் அமெரிக்க படைகளின் வேலை முடியவில்லை. இன்னும் அங்கு நாம் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. ஓசாமாவைப் பிடிக்க வேண்டியுள்து. அவர்களது செயல்பாடுகளை முடிக்க வேண்டியுள்ளது என்றார் ஓபாமா.












Click it and Unblock the Notifications