மதுரை அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாமாக பலியானார்கள்.
மதுரை திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அன்பழகன் (18). இவரது நண்பர் கார்த்திக்.
இவர்கள் இரண்டு பேரும் கல்லுப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு பைக்கில் சென்றனர்.
பைக் ஆலம்பட்டி ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக் அப்பளம் போல் நொறுங்கியது. அதே இடத்தில் அன்பழகனும், கார்திக்கும் பலியானார்கள்.
இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications