அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்: பெங்களூர்-டெல்லி ஊழியர்கள் பணி நீக்கம்
டெல்லி: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி பெங்களூர், டெல்லியில் பணியாற்றும் தனது ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்களில் பலரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வங்கியில் பணியாற்றியவர்கள் ஆவர்.
இந்தியாவில் கிரெடிட் கார்ட் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த வங்கியும் சர்வதேச நிதி நெருக்கடிக்கு தப்பவில்லை.
இந்தியாவி்ல் இந்த வங்கிக்கு 6,000 ஊழியர்கள் உள்ளனர். இந் நிலையில் முதல் கட்டமாக பெங்களூர், டெல்லியில் பணியாற்றும் பல மூத்த ஊழியர்கள் 200 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது இந்த வங்கி.
மேலும் பலரும் அடுத்தடுத்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நிறுவனங்கள் பெரிய அளவில் வேலை நீக்கங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சி்ங் நேற்று கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வேலை நீக்கங்களை அமெரி்க்கன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
உலக அளவில் தனது பணியாளர்களில் 10 சதவீதம் பேரை, அதாவது 7,000 பேரை, பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த வங்கி 1.8 பில்லியன் டாலரை சேமிக்க முடியும்.
இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் வேலையிழப்பர் என்பதைக் கூற வங்கி மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications