இலங்கை: ''கடைசி தமிழன் உள்ளவரை போர் ஓயாது''!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடைசி தமிழன் உள்ளவரை ஆயுத்த்தைக் கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று இலங்கை எம்பிக்கள் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா கூறியுள்ளனர்.

திண்டுக்கல்லில், மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இலங்கை எம்.பிக்கள்., சிவாஜிலிங்கம், சிறீகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிவாஜிலிங்கம் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வு கண்டு இலங்கை அரசு பயப்பட ஆரம்பித்துவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானைப் பிரித்தது போல் இலங்கையையும் பிரித்துக் கேட்டிருந்தால் தமிழர்களுக்கு இந்நிலை அங்கு ஏற்பட்டிருக்காது.

இதுவரை இலங்கை அரசு, தமிழர்கள் மீது 6,000 டன் வெடிகுண்டுகளை வீசியுள்ளது.

தமிழக அரசு கொடுக்கும் அரிசியை வைத்து சமைத்து சாப்பிடும் நிலை அங்கு இல்லை. போர் நடந்துகொண்டிருக்கும் போதே இந்த உதவி என்றால், அது மக்களுக்கு வாய்க்கரிசியாகத்தான் சென்று சேரும்.

உலகத்தில் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டாலும் இலங்கையில் தடை செய்யப்படவில்லை. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கடைசி தமிழன் உள்ளவரை ஆயுதத்தைக் கீழே போடுவது நடக்காத ஒன்று என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+