வட இலங்கையில் கடும் சண்டை - பலர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வடக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள் தரப்பில் பலர் பலியாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், முகமலை, நாகர்கோவில், கிலாலி ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில், கிலாலியில் 3 விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. அதேபோல முகமலையில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த தாக்குதல் பதுங்கு குழியும் தாக்கி அழிக்கப்பட்டது.

இந்த மோதல்களில் பலர் உயிரிழந்தனர். ராணுவத் தரப்பில் 3 பேர் பலியானார்கள்.

கிளிநொச்சியில் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் ராணுவம் போரிட்டு வருகிறது. மேற்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.

வெளி ஓயா பகுதியில், விடுதலைப் புலிகளின் வசம் உள்ள சில உட்புறப் பகுதிகளில் கடும் சண்டை நடந்தது. இதில் நான்கு விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் பலியானார்கள். இரு தரப்பிலும் 16 பேர் காயமடைந்தனர்.

ராணுவத்தின் இந்த கூற்று குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+