வீர. இளவரசன் உடல் சொந்த ஊரில் அடக்கம்
மதுரை: மதுரை மருத்துவமனையில் மரணமடைந்த மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசனின் உடல், அவரது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் நேற்று காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மூத்த தலைவர்கள், பெரும் திரளான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை வீர.இளவரசனின் உடல் அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், திமுக சார்பில் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட தலைவர்கள் வீர.இளவரசனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications