100 முன்னணி டெலிகாம் அதிபர்கள் பட்டியலில் 7 இந்தியர்கள்
டெல்லி: உலகின் 100 சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
குளோபல் டெலிகாம்ஸ் பிசினஸ் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீநாத் நரசிம்மன், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்ட 7 பேர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் சீனாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லி யிஸோங் ஆகியோர் முறையே 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஸ்ரீநாத் நரசிம்மனுக்கு 8வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சுனில் பார்தி மிட்டலுக்கு 35வது இடம் கிடைத்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மனோஜ் கோலி 39வது இடத்தில் இருக்கிறார்.
மோட்டோராலா மொபைல் சர்வீஸ் பிரிவின் தலைமை செயலதிகாரி சஞ்சய் ஜா 41வது இடத்திலும், ஆகரே நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் அஹுஜா 45வது இடத்திலும், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் குளோபல் டேடா மற்றும் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவின் தலைவர் வினோத் குமார் 68வது இடத்திலும், வோடபோன் முன்னாள் தலைமை செயலதிகாரி அருண் சரின் 71வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோச் 33வது இடத்தையும், கார்லோஸ் ஸ்லிம் ஹெலு 73வது இடத்தையும் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications