ஒகேனக்கல்: மேலும் ஒரு வழக்கு: கர்நாடகம் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
மைசூர்: தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்குத் தொடர்கிறது கர்நாடக அரசு.
இதுகுறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
ஒகேனக்கல் திட்டத்தை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்ந்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது. இப்போது மேலும் ஒரு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது அமைச்சரவை.
இது குறித்து அரசு சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதை அறிந்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக அரசு ஆலோசிக்கும். பிரதமர் தன் முடிவை அறிவித்த பின்னர், மாநில அரசு தனது முடிவை எடுக்கும்.
எந்த விலை கொடுத்தாவது இந்த திட்டத்தை நிறுத்துவோம். இதுதான் கர்நாடகத்தின் நிலை, என்று பொம்மை கூறினார்.












Click it and Unblock the Notifications