இந்தியாவை ஒதுக்குகிறாரா ஒபாமா?

பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் கூட பேசிவிட்ட அவர் இந்தியப் பிரதமரை அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதன் மூலம் எடுத்த எடுப்பிலேயே அவர் இந்தியாவை ஒதுக்க ஆரம்பித்துவிட்டதாக குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
ஆனால், இதைப் பெரிதாக்க வேண்டியதில்லை என்று கூறிய வெளியுறவு அமைச்சகம் நம்மை தென் கொரியா, நியூசிலாந்து, ஜப்பானுடன் ஒபாமா வைத்துப் பார்க்கவில்லை, ரஷ்யா, சீனா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேசுகையில் நம்முடனும் அவர் பேசுவார் என்று கூறியிருந்தது.
இந் நிலையில் ஒபாமா நேற்று ரஷ்ய அதிபருடனும் சீன அதிபர் ஹூ ஜியான்டோவுடனும் பேசிவிட்டார். இதனால் நம்மை ஒதுக்குவது நிஜமோ என்ற லேசான கவலை வெளியுறவுத்துறையையும் தொற்றிக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், பிரதமர் ஓமன், கத்தாரில் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் தான் அவர் நேற்று நம்முடன் பேசவில்லை என்றும் சமாதானம் கூறுகின்றனர். விரைவிலேயே அவர் பிரதமரைத் தொடர்பு கொள்வார் என்கின்றனர்.
அவர் யாருடன் முதலில் பேசுகிறார் என்று பார்ப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது என்கிறார்கள்.
ஆனால் ஒபாமாவுக்கு அணு ஒப்பந்த விஷயத்தில் சின்ன கோபம் என்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த ஒபாமா, இது தொடர்பாக பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் இந்தியா அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து போட வேண்டியதும் அவசியம் என்றரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த பகுதியை மட்டும் வெட்டி எடிட் செய்துவிட்டு, இந்தியா-அமெரிக்க அணு ஒப்பந்தந்துக்கு ஒபாமா முழு ஆதரவு என்றரீதியில் அவரது கடிதத்தை வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது.
இதை ஒபாமா ரசிக்கவில்லை என்கின்றனர்.
எடுத்த எடுப்பிலேயாப்பா....!












Click it and Unblock the Notifications